10Th Tamil Notes Of Lesson Jan Week-1

 நாள்                 :           03-01-2022 முதல்  08-01-2022          

மாதம்               :             ஜனவரி            

வாரம்               :           ஜனவரி - முதல்  வாரம்                                        

வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :1. மங்கையராய் பிறப்பதற்கே

                                          2. புறப்பொருள் இலக்கணம்

கருபொருள்                            :

  நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்

 பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பொருள் பெறும் இடமறிந்து, அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன் பெறுதல்

உட்பொருள்                           :

ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளை அறிதல் மற்றும் போற்றுதல்

  புறப்பொருள் கூறும் திணைகள் மற்றும் செய்திகளை பெறுதல்

கற்றல் விளைவுகள்                 :

 ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளின் மூலம் தாமும் அந்நிலையை எட்டுதல் மற்றும் பெண்களை போற்றும் மனப்பாங்கினை வளர்த்தல்.

புறத்திணைகளின் தன்மைகள் அறிதல். எதிரெதிர் திணைகளை அறிதல்

அறிமுகம்                :

 மாணவர்களிடம் அவர்களின் அம்மாக்கள் செய்யும் பணிகளை கேட்டறிந்து ஊக்கப்படுத்தி பாடப்பொருளை ஆயத்தப்படுத்துதல்.

 அகப்பொருள் பற்றிய பாடப்பகுதியிலிருந்து சில வினாக்களைக் கேட்டு பாடப்பொருளை ஆயத்தப்படுத்துத

கற்றல் மாதிரிகள்                   :

 சாதனை பெண்களின் புகைப்படங்கள்,கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி,

 வலையொளி பதிவுகள்,விருதுகளின் புகைப்படங்கள்

முக்கிய கருத்துகள் மற்றும் பாடச் சுருக்கம்                        :             

 மங்கையராய் பிறப்பதற்கே எம். எஸ். சுப்புலட்சுமி – 1954  தாமரையணி விருது,

•       1963 – இங்கிலாந்து மற்றும் ஐ.நா.அவையில் பாடல் பாடியது,

•       1974 – மகசேசே விருது

•       இந்திய மாமணி விருது

o   பால சரசுவதி          -             தாமரைச் செவ்வணி விருது

•       ஜனகணமன – பாடலுக்கு நடனம்

o   ராஜம் கிருஷ்ணன்   -             சாகெத்திய அகாதெமி விருது வென்றவர்,

•       கற்பனை கதை எழுதாதவர்

•       ஆய்வுக்குச் சென்று அங்கு உள்ள சூழல் குறித்து எழுதுபவர்

o  கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் -மதுரையின் முதல் பட்டதாரி

•       இந்தியாவின் தாமரைத் திரு

•       சுவீடன் – வாழ்விரிமை விருது

•       சுவிட்சர்லாந்து – காந்தி அமைதி விருது

o  சின்னப்பிள்ளை      -             மகளிர் குழு ஆரம்பித்தவர்

•       பெண் ஆற்றல் விருது

•       ஒளவை விருது

•       பொதிகை விருது

•       தாமரைத்திரு விருது

Ø  புறப்பொருள் இலக்கணம்

 

o   வெட்சி – ஆநிரை கவர்தல்

o  கரந்தை – ஆநிரை மீட்டல்

o   வஞ்சி – மண்ணாசை காரணமாக போரிடல்

o   காஞ்சி – எதிர்த்து போரிடல்

o   நொச்சி – மதில் காத்தல்

o  உழிஞை – மதிலை கைப்பற்றுதல்

o  தும்பை    - வலிமை நிலைநாட்ட போரிடல்

o  வாகை     - வெற்றிப் பெற்ற மன்னனைப் பாடுதல்

o  பாடாண் – பாடு + ஆண் + திணை = பாடுவதற்கு தகுதி உடைய ஆண்மகனின் ஒழுகலாறுகளைப் பாடுவது

o  பொதுவியல் – வெட்சி முதல் பாடாண் வரை உள்ளவற்றில் சொல்லப்படாதவை மற்றும் பொதுவான தகவல்கள்

o  கைக்கிளை             -             ஒரு தலைக்காமம்

o  பெருந்திணை          -             பொருந்தா காமம்

o   மூன்று காண்டங்கள்

ஆசிரியர் செயல்பாடு              :

Ø பாடப்பொருளுக்கு ஆர்வமூட்டல்

Ø  விருதுகளின் விளக்கங்கள் கூறல்

Ø  பெண்களின் சாதனைகளைப் பட்டியலிடுதல்

Ø  ஒவ்வொரு மாணவிக்கும் படிக்கும் வாய்ப்பினை நல்குதல்

Ø  பொருள் இலக்கணம் பற்றி விளக்குதல்.

Ø அகப்பொருள் இலக்கணத்தை நினைவூட்டல்.

Ø  ஒவ்வொரு திணையின் செயல்பாடுகலையும், காணொலி வழியே காட்டுதல்.

Ø  ஒவ்வொரு திணையின் செயல்பாடுகளை விளக்குதல்

Ø  எதிர் எதிர் திணைகளை விளக்குதல்

Ø திணைக்குரிய பூக்களை காட்டி விளக்குதல்

கருத்துரு வரைபடம்                :             

 மங்கையராய் பிறப்பதற்கே

  புறப்பொருள் இலக்கணம்

மாணவர் செயல்பாடு               :             

  பார் போற்றிய பெண்களின் சாதனைகளை அறிதல்

 பெண்களுக்கான பணி கடினம் என உணர்தல்

  தனது தாயின் உழைப்பை போற்றுதல்

  விருதுகளின் உன்னதம் அறிதல்.

 தாங்களும் அதுபோல விருதுகளை வாங்க முற்படுதல்

 திணைகளின் விளக்கம் தெளிதல்

  எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்தி அறிதல்

திணைக்களுக்கு உரிய பூக்களையும் அதன் செயல்பாடுகளையும் அறிதல்

 

வலுவூட்டல்                             :

    பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

   மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

  சாதனை பெண்களின் சாதனைகளை அறிதல்.

  சாதனை பெண்களின் விருதுகளை அறிதல்.

  திணையைப் பற்றி அறிதல்.

  திணைகளை அட்டவணைப்படுத்துதல்

 திணைக்குரிய பூக்களை வகைப்படுத்துதல்

மதிப்பீடு                                 :

  எம். எஸ். சுப்புலட்சுமி எந்த ஆண்டு தாமரையணி விருது பெற்றார்?

  வேருக்கு நீர் என்ற புதினம் எழுதியவர் யார்?

  ஆநிரைகள் பற்றிய திணைகள் யாவை?

  மதில் போர் பற்றிய திணைகள் யாவை?

  பாடாண் திணையை பற்றிக் கூறுக.

தொடர்பணி:

 பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்


Post a Comment

0 Comments