10Th Tamil Lesson Plan Dec Week 2(13-12-21 To 18-12-21)
நாள் : 13-12-2021 முதல் 18-12-2021
மாதம் : டிசம்பர்
வாரம் : இரண்டாம் முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு :1. திருக்குறள் 2. சிற்றகல் ஒளி – தன் வரலாறு
கருபொருள் :
•திருக்குறள் கூறும் அறக்கருத்துகளைப் பின்பற்றுதல்.
•பெரும் தலைவர்களின் தியாக உணர்வுகளைப் போற்றுதல்.
உட்பொருள் :
•திருக்குறளில் உள்ள அமைச்சு,பொருள் செயல்வகை, கூடாநட்பு, பகைமாட்சி,குடி செயல்வகை,நல்குரவு,இரவு,கயமை, குடி செயல்வகை அதிகாரங்களின் அறக்கருத்துகளை அறிதல்.
•மா.பொ.சி யின் கல்வி,போராட்டங்கள், தியாகங்கள், தமிழகம் பற்றிய கனவு, வடக்கெல்லை,தெற்கெல்லை பற்றி அறிதல்.
அறிமுகம் :
•திருக்குறளின் நிதீ கதையினைக் கூறி அறிமுகம் செய்தல்.
•சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர் ஒருவரைப பற்றி கூறி அறிமுகம் செய்தல்.
கற்றல் விளைவுகள் :
நீதி நூல்கள் கூறும் வாழ்வியல் அறக்கருத்துகளைப் பின்பற்றுதல்.
தன் வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து அதுபோல எழுத முற்படுதல்.
கற்றல் மாதிரிகள் :
கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி
முக்கிய கருத்துகள் மற்றும் பாடச் சுருக்கம்
பாடப்பகுதியில் உள்ள இடம் பெற்றுள்ள அதிகாரங்கள்
அமைச்சு ,பொருள் செயல் வகை, கூடாநட்பு,பகை மாட்சி,குடி செயல் வகை, நல்குரவு,இரவு,கயமை, மா.பொ.சி. யின் இளமை காலம்,வறுமையால் இழந்த கல்வி,மா.பொ.சி. ஒரு புத்தகப்பித்தன், மா.பொ.சி.யின் பேராயக்கட்சியில் பங்கு,மா.பொ.சி. சென்னையை மீட்ட நிகழ்வு,வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்கள், மா.பொ.சி.யின் தமிழகம் பற்றிய கனவு
ஆசிரியர் செயல்பாடு :
திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல். , திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்., திருக்குறளுக்கான பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.திருக்குறளில் காணப்படும் நயங்களைவிளக்குதல்.நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல் உரைநடையில் உள்ள உணர்வுகளுடன் வாசித்தல். மா.பொ.சி.யின் போராட்டங்கள் பற்றி கூறுதல். மா.பொ.சியின் வடக்கெல்லை,தெற்கெல்லைப் போராட்டங்கள் பற்றிக் கூறுதல் மார்ஷ்ல் நேசமணி பற்றி அறிதல்
கருத்துரு வரைபடம் : திருக்குறள்
மாணவர் செயல்பாடு :
திருக்குறளினை சீர் பிரித்து படித்தல்
திருக்குறளினை இனிய இராகத்தில் பாடுதல்.
மனப்பாடக் குறளை மனனம் செய்யும் திறன் பெறுதல்
திருக்குறளில் உள்ள கடினச் சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் காணுதல். திருக்குறள் கூறும் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும் திறன் பெறுதல்.
தன் வரலாறு உரைநடை பகுதிகளை நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல் உரைநடையை பிழையின்றி படித்தல்
உரைநடையில் காணும் புதிய சொற்களை அடையாளம் காணுதல்.
மா.பொ.சி. யின் போராட்டங்களை மதித்தல்
வலுவூட்டல் :
பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.
குறைதீர் கற்றல் :
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மெல்ல கற்போர் செயல்பாடுகள்:
- குறளை சீர் பிரித்து படித்தல்.
- படித்துப் பொருள் உணர்தல்.
மதிப்பீடு :
- வறுமையைப் போல் துன்பம் தருவது எது ?
- பகைவரின் பண்புகள் யாவை?
- தமிழனத்தை ஒன்றுப்படுத்தும் காவியமாக மா.பொ.சி. கருதியது எது?
.
தொடர்பணி:
பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்
0 Comments